தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பட்டமேற்பு விழா 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 479 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற காமராஜ் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு 41ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் காமராஜர் கல்வி அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காமராஜ் கல்லூரியின் செயலாளர் சோமு தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஜெ.பூங்கொடி முன்னிலைவகித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பட்டவிழா சிறப்புரையில் மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் சார்ந்த கலை மற்றும் அறிவியல் படிப்புகளால் மாணவர்கள் அடுத்தகட்ட வாழ்வில் முன்னேற முடியும் என கூறினார். இவ்விழாவில் 12 பாடப்பிரிவுகளில் மொத்தம் 479 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story