காரைக்குறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

காரைக்குறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

 குடியரசு தினவிழாவையொட்டி காரைக்குறிச்சியில் அரசு மேல்நிலைபள்ளியில் கிராமசபை கூட்டம் நடந்தது.  

குடியரசு தினவிழாவையொட்டி காரைக்குறிச்சியில் அரசு மேல்நிலைபள்ளியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

குடியரசு தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி ஊராட்சிக்கான கிராமசபை கூட்டம் அக்கிராம அரசு மேல்நிலைபள்ளியில் நடைப்பெற்றது.

ஊராட்சிமன்ற தலைவர் கவிதா விஜயகுமார் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைத்து வரத்து வாய்கால்களையும் தூர்வார வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. மேலும் தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கபட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், சுயஉதவி குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story