வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வனத்துறை 

தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் வனம் சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக வரும் செவ்வாய் கிழமையன்று குறைதீர் முகாம் நடக்க இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி வன கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான வனத்துறை குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இந்த கூட்டத்தை மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வனம் சார்ந்த தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story