ஒசூரில் விமான நிலையம் அறிவிப்பு; திமுகவினர் கொண்டாட்டம்

ஒசூரில் விமான நிலையம் அறிவிப்பு; திமுகவினர் கொண்டாட்டம்

 ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து திமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 

ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து திமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரி பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து ஒசூர் மாநகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். ஒசூர் தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஒய். பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர் ஓசூர் திமுக கட்சி நிர்வாகிகள்.

Tags

Next Story