திருச்சி அருகே வீடு புகுந்து திருட்டு !

திருச்சி அருகே வீடு புகுந்து திருட்டு !

திருட்டு

திருச்சி அருகே வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
திருவெறும்பூா் அருகே பூலாங்குடி காலனி பாரத் நகா் திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி கலைச்செல்வி (63). இவா் கடந்த 4 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னை சென்றாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டூரில் உள்ள கலைச்செல்வியின் மருமகன் மாரிமுத்து வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2.5 பவுன் நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story