சாலையில் மனைவியை தாக்கிய கணவர் கைது

சாலையில் மனைவியை தாக்கிய கணவர் கைது

 போலீசார் வழக்குப்பதிவு

அரூர் நகரப் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் குடித்துவிட்டு தனது மனைவியை சாலையில் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில் அரூர் காவல்துறையினர் சுதர்சனை கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் இவருடைய மனைவி அட்சயா இவர்கள் 2 பேரும் கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதர்சன் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டுக்கு வந்த சுதர்சன் அட்சயாவை தாக்கியுள்ளார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன், அருகே இருக்கும் தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது அங்கு வந்த சுதர்சன், அட்சயாவை வழிமறித்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத் துள்ளார். அப்போது அட்சயா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் சுதர்சன் அங்கிருந்து சென்றுள்ளார். இதில் காயமடைந்த அட்சயா அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுதர்சனை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story