சட்டவிரோத மது விற்பனை - இருவர் கைது
பைல் படம்
குமாரபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதிஇல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. கெங்காதரன், எட்டுக்கள் ராம்குமார், உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, குப்பாண்டபாளையம் ஜே.ஜே. நகர் பகுதியில் மது விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் செல்வராஜ், (52), வீரன், (55), இருவரை கையும் களவுமாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த, தலா நான்கு மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story