கல்வராயன்மலையில் சாராய ஊரல் அழிப்பு !

கல்வராயன்மலையில் சாராய ஊரல் அழிப்பு !

சாராய ஊரல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராயத்தை சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவுப்படி கரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருவங்காடு மேற்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 06 பேரல்களில் சுமார் 1,200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய 02 லாரி டியூபில் சுமார் 60 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story