நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

நாமக்கல்லில் நாளை  பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம்  திறப்பு விழா

நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா. 20,000 சதுரடியில் மிக பிரமாண்ட அளவில், 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர்.
நாமக்கல் - சேலம் சாலையில், 'பூமகள் சில்வர் பேலஸ்' புதிய ஷோரூம் திறப்பு விழா, நாளை நடக்கிறது. நாமக்கல் மக்களின் நம்பிக்கை பெற்ற, 'பூமகள் சில்வர் பேலஸ்' கடைவீதியில், 48 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது, மக்களின் அமோக ஆதரவோடு சேலம் சாலையில், வீட்டு உபயோக பொருட்களுக்கென்று, 20,000 சதுரடியில் மிக பிரமாண்ட அளவில், 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர் தனிதனிபிரிவுகளோடு அதிக மாடல்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்பொலிவுடன், நாளை வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது. காலை, 7:30 மணிக்கு, விநாயகர், லட்சுமி, சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு, 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர் திறப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூமகள் நிறுவனங்களை சேர்ந்த கந்தசாமி, வேலுசாமி, இந்திரகுமார், தயாளன் ஆகியோர் செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய பித்தளை பாத்திரம், எவர் சில்வர், தாமிரம், மொத்த விலையில் சில்லரை பாத்திர விற்பனை, முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், பூஜைப் பொருட்கள், கோவில் பொருட்கள் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என, நிர்வாகத்தினர் கூறினர். மேலும், இந்த பிக் ஸ்டோர் திறப்பு விழாவையொட்டி, 22ம் தேதி முதல், 15 நாட்களுக்கு சிறப்பு விற்பனை நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story