பாரதிய மஸ்தூர் சங்க பெயர் பலகை திறப்பு

மதுரை மாட்டுத்தாவணியில் பாரதிய மஸ்தூர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்குளம் பணிமணையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக புதிய பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா சிவசக்திராஜ் தலைமையில் நடைபெற்றது. மத்திய சங்க செயல் தலைவர் நரசிம்மன், கிளைச் செயலாளர் ஒச்சப்பன்,கிளை பொருளாளர் பிச்சை பெருமாள் முன்னிலை வகித்தனர்.கிளை பொருளாளர் பாரதிதாசன் வரவேற்புரை ஆற்றினார்.தமிழக பேரவை செயலாளர் பாலன் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.வழக்கறிஞர் அன்பழகன் மதுரை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பாரதிய மஸ்தூர் சங்கபெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் பிஎம்எஸ் மதுரை மண்டல தலைவர் சிவ சுரேஷ் பொதுச் செயலாளர் லட்சுமணன் அமைப்புச் செயலாளர் கண்ணன் உட்பட பல கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story