திமுக தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

திமுக  தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
 தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் கட்டுப்பாட்டு அறையை என்.ஆர்.இளங்கோ எம்.பி திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல்-2024 கட்டுப்பாட்டு அறை (WAR ROOM) தென்காசி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அமைக்கப்பட்டு, அதனை திராவிட முன்னேற்றக் கழக மாநில சட்டத்துறை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story