கூரம்பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

பாலவாடி ஊராட்சி கூரம்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி ஊராட்சி கூரம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பல நாட்களாக நியாய விலை கடை வேண்டும் எனவும் நியாய விலை கடை பொருட்கள் செல்ல வேண்டி உள்ளதாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று பொதுவிநியோகத் திட்டம் கூட்டுறவு புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு நடைபெற்றது இந்த விழாவில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இவ்விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story