காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் தனியார் அமைப்பு, சங்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது


காஞ்சிபுரத்தில் தனியார் அமைப்பு, சங்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது

காஞ்சிபுரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வ அமைப்பினரும் தங்களது செல்வாக்கை காட்டும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வந்தனர். தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறையால், அரசியல் கட்சியினர் விளம்பரம் இல்லாமல் தண்ணீர் பந்தல் திறக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால், தனியார் அமைப்பு, சங்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சார்பில், இரட்டை மண்டபம் சிக்னல் அருகில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Tags

Read MoreRead Less
Next Story