மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

சேலம் மாவட்டம்,மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கருவிகள் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு இ.எஸ்.ஐ மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி சிறப்பு சேம நலநிதி குளறுபடிகளை களைய வேண்டும், அனைத்து பிரிவு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் தினக்கூலி ரூ .610 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக வார்டு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story