வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்

வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்

வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்

வாகன ஓட்டிகள் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, களக்காட்டூர் மும்முனை சாலை சந்திப்பு அருகில், வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், இச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story