85 வயது வாக்காளர்களுக்கு 2d படிவம் வழங்கல்!

85 வயது வாக்காளர்களுக்கு 2d படிவம் வழங்கல்!

 புதுக்கோட்டையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 2D படிவம் வழங்கப்படுவதை தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். 

புதுக்கோட்டையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 2D படிவம் வழங்கப்படுவதை தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் அருகில் உள்ள பகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 12D படிவம் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story