JEE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மாநில அளவிலான JEE தேர்வில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம். மாநில அளவிலான JEE தேர்வில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் JEE தேர்வில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (23.12.2025) கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் போன்று மாவட்டங்களில் / வட்டார அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சனிக்கிழமை தோறும் JEE/NEET/CUET தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 21.01.2026 முதல் நடைபெறவுள்ள JEE தேர்வுகளை முன்னிட்டு வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட மாதிரிப்பள்ளியில் 24.12.2025 முதல் 18.01.2026 வரை மாநில அளவிலான பயிற்சிகள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்க இருக்கும் 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேரந்ந்த 12 மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர்,சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), செல்வகுமார் மற்றும் ஆசியரியர்கள் உடனிருந்தனர்.
Next Story