கடையநல்லூர் : போதையில் தகராறு - 17 இடங்களில் கத்திக்குத்து

கடையநல்லூர் : போதையில் தகராறு - 17 இடங்களில் கத்திக்குத்து

காயமடைந்த இளைஞர் 

கடையநல்லூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் உடலில் 17 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவர், நேற்று மது போதையில் முருகன் என்பவரது வீட்டின் முன் படுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த முருகன் கண்ணனை கத்தியால் சரமாரியாக 17 இடங்களில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கண்ணனை. அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story