பழனி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

பழனி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம் 

காளியப்பனூரில், பழனி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணி மலை அருகே உள்ள காளியப்பனூரில், அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலையில் நான்காம் கால பூஜைகள் நடைபெற்று, யாக வேள்வியில் யாகம் வளர்க்கப்பட்டது.

யாக வேள்வியில் பூஜித்த புனித நீரை பின்னர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் விமரிசையாக நடத்தினர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர் விழா கமிட்டியினர்.

Tags

Read MoreRead Less
Next Story