கல்லக்குடி ஜல்லிக்கட்டு - காளை உரிமையாளர்களுக்கு கார் பரிசு

கல்லக்குடி ஜல்லிக்கட்டு -  காளை உரிமையாளர்களுக்கு கார் பரிசு
காளை உரிமையாளருக்கு கார் பரிசு 
புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற சிறந்த காளை உரிமையாளர்களுக்கு கார், ஜீப்,மோட்டார் பைக் பரிசுகளை திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் ஜல்லிக் கட்டு போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை தலைமை வகித்தார். விழாவில் திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டு ஜல்லிக் கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற காளைகளில் சிறந்த காளைக்கு தொழில் அதிபர் அருண் நேரு வழங்கிய காரினை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஜாபர்அலி ஜல்லி கட்டு காளைக்கு முதல் பரிசாகவும்,சிவகங்கை மாவட்டம் கண்டவராயன் பட்டி சீமான்முரசு சண்முகநாதன் ஜல்லிகட்டு காளைக்கு தொழிலதிபர் பாரிவள்ளல் சார்பில் இரண்டாம் பரி சாக மோட்டார் சைக்கிள், சிறப்பு பரிசாக மதுரை மாவட்டம் குலமங்கலம் வக்கீல் திருப்பதி காளைக்கு அமைச் சர் கே.என்.நேரு வழங்கிய 'மகேந் திரா ஜீப்' பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து மாடுபிடி வீரர்களில் முதல் பரிசாக மதுரை ஸ்ரீதர் என்பவருக்கு தொழிலதிபர்கள் பனங்கூர் காமராஜ் மற்றும் பெருவை முருகவேல் சார்பில் ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக தொழிலதிபர் காம்டெக் ரவி சார்பில் கருப்பாயூரணி கார்த்திக் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கினார். இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story