கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் கடை வீதியில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் மார்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் கைது செய்யக்கோரி மாவட்ட குழு உறுப்பினர் அம்மையப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கிட வலியுறுத்தியும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story