கன்னியாகுமரி காரில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி ! 

கன்னியாகுமரி காரில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி ! 
 ரேஷன் அரிசி
கன்னியாகுமரியில் ரேஷன் அரிசியை காரில் கடத்த முயன்ற நபர் தலைமறைவு. போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் கோவளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரை ஓட்டி வந்த டிரைவர் சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதை அடுத்து அங்கு சென்று காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மூடைகளில் கட்டப்பட்டிருந்த 250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story