கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல் !

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல் !

காவல் நிலையம் 

குழந்தை கடத்தலில் வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடுவதாக கூறி சமூக வலைதளத்தில் பொய்யான வதந்திகள் பரவி வருகிறதால் வடமாநிலத்தவர்களை தாக்க வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தலில் வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடுவதாக கூறி சமூக வலைதளத்தில் பொய்யான வதந்திகள் பரவி வருகிறது.இது முற்றிலும் வதந்தி என மாவட்ட காவல்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பி வடமாநிலத்தவர்களை தாக்க வேண்டாம் யார்மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை தாக்கவோ அல்லது கடுமையான ஆயுதங்களை கொண்டு அடிக்கவோ கூடாது அப்படி சந்தேகபடும் நபர்களை பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உண்மை இருப்பின் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம். இப்படிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை.

Tags

Read MoreRead Less
Next Story