தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு பாராட்டு

தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு பாராட்டு
தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் தங்கச் செயினை ஒப்படைத்த தம்பதியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் மனைவி கற்பகவல்லி இருவரும் நேற்று இரவு ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கிடந்த 5 பவுன் தாலி செயினை எடுத்து ஆய்க்குடி காவல் நிலையத்தில் சென்று கீழே கிடந்த தங்கப்பவனை ஒப்படைத்தனர்.

இச்செயலை செய்த தம்பதியர்களை பாராட்டி தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆய்க்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவித்தார். இதைக் கண்ட பகுதி பொதுமக்களும் சமூக அரபுலர்களும் வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story