குலசேகரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்  

குலசேகரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்  
குலசேகரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் இன்று குலசேகரம் அரச மூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எமனேசர் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கண்டனஉரையாற்றினார்கள்.

இந்த போராட்டத்தில் திருவட்டார் காங்கிரஸ் தலைவர் ஜெ பா, திருவட்டார் வட்ட ஐஎன்டியுசி தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெய்சிங் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story