வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது – வழக்கறிஞர் புகார்

வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது – வழக்கறிஞர் புகார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த வழக்கறிஞர் தனது வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரன் இவர் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வாக்களிக்க வேண்டிய மையத்தை முடிவு செய்ய இயலவில்லை வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . குடவாசல் நகரில் நிரந்தரமாக வசித்து வரும் இவருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை என அனைத்து அரசு ஆவணங்களும் அவரது நிரந்தர முகவரியில் இருந்து வருகிறது.

இவருக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் வாக்களிக்கும் மையம் பற்றி குறிப்பிடாத நிலையில் வாக்களிக்கும் மையத்தை முடிவு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் ,கோட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்ட போதிலும் இதுவரை எந்தவித தீர்வும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை இதனால் விரக்தி அடைந்த வழக்கறிஞர் சிவசங்கரன் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story