திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது

திருமருகல் அருகே சாராயம் விற்றவர் கைது

 கைது

நாகை மாவட்டம்திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் சாராயம் விற்றவர் கைது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் சாராயம் விற்றவர் கைது. திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிடாமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (வயது 40) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story