மக்களவை தேர்தல் : சுழற்சி முறையில் போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு

மக்களவை தேர்தல் : சுழற்சி முறையில் போலீஸ், நுண் பார்வையாளர்கள் தேர்வு

சுழற்சி முறையில் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்கள் 216 பேர் மற்றும் போலீசார் 670 பேருக்கான சுழற்சி முறை தேர்வு நேற்று நடந்தது.

ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்வது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல தேவையான வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 1,417 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு ஊழியர்கள், போலீசார், மத்திய அரசின் ஊழியர்கள் என, அனைவருமே கணினி மூலம் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறை தேர்வுக்கு பின்னரே நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு, சுழற்சி முறை தேர்வு மூலம், எந்த ஊழியர், எந்த ஓட்டுச்சாவடியில் பணியாற்ற போகிறார் என கணிக்க முடியாது.

அவற்றை முன்கூட்டியே திட்டமிடவும் முடியாது. இதன் காரணமாக, சுழற்சி முறை தேர்வு நடக்கிறது. ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள போலீஸ் மற்றும் மத்திய அரசின் நுண் பார்வையாளர்களுக்கான கணினி சுழற்சி முறை தேர்வு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் பொது பார்வையாளர் பூபேந்திரசவுத்ரி தலைமையில், போலீஸ் பார்வையாளர் பரத்ரெட்டி, கலெக்டர் கலைச்செல்வி முன்னிலையில் நேற்று நடந்தது.

Tags

Read MoreRead Less
Next Story