காதல் தோல்வி - கல்லூரி மாணவர் தற்கொலை

காதல் தோல்வி - கல்லூரி மாணவர் தற்கொலை

பைல் படம் 

தட்டார்மடம் அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள ராஜமன்னார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் கோகுல் (23). இவர், நாசரேத்தில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாராம். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் இவரது செல்போன் அழைப்பை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த கோகுல் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story