பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பால் காவடி பெருவிழா

மதுராந்தகம் அருகே ஸ்ரீ சின்மய விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் நடந்த சித்திரை கிருத்திகை பால் காவடிவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்மய விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 64-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழா நடைபெற்றது..இந்த விழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு முருகப்பெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, வேல் காவடிகள் எடுத்து அழகு குத்தியும் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story