மகா சிவராத்திரி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றம்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்சி நடைபெற்றது.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திருவிழாவிற்கு விரதம் ஏற்க்க காப்புகட்டி சென்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வரும் மார்ச் மாதம் 08ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம்.
அதே போன்று அடைத்த கதவுக்கே இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் மாசித் திருவிழாவிற்காக பரம்பரை காவல்காரர்கள் வெட்டி கொண்டு வரப்பட்ட 80 அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் மஞ்சல் நிற கொடி கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் மூங்கில் கொடிமரம் ஊண்டப்பட்டு கொடியேற்றும் வைபவம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பக்தர்கள் கலந்து கோண்டு சாமி தரிசம் செய்து விரதத்திற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story