சோழீஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி சோழீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரியையொட்டி அருள்மிகு சோழீஸ்வரர், உடனமர் பெரியநாயகி, நந்தி பகவான் சுவாமிகளுக்கு பால், தயிர்,சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய,விடிய கோயிலில் அமர்ந்து சிவன் பக்தி பாடல்களைப் பாடி சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story