போக்சோ குற்றவாளி கைது!

போக்சோ குற்றவாளி கைது!

தீபேஷ் குருங் 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊரக உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கப்பச்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த தீபேஷ் குருங் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தகல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த தீபேஷ் குருங் மீது நீதிமன்றத்தின் மூலம் பிடியாணை புதுப்பிக்கப்பட்டு போலீஸாரால் தேடப்பட்டுவந்தான். இந்நிலையில் தலைமறைவாக இருந்துவந்த தீபேஷ் குருங், கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள் மற்றும் காவலர்கள் தீபேஷ் குருங்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story