மீன்பிடி குள வாட்ச்மேனை தாக்கியவர் கைது

மீன்பிடி குள வாட்ச்மேனை தாக்கியவர் கைது

காவல் நிலையம் 

சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டியில் அத்துமீறி மீன் பிடித்ததை தடுத்த குளத்தின் வாட்ச்மேனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி குளத்தை சேர்ந்த சிங் என்பவர் மீன்பிடிக்கும் உரிமம் எடுத்துள்ள குளத்தில் பாண்டிதுரை என்பவர் வாட்ச்மேனாக பணிபுருகிறார். நேற்றிரவு யோகேஷ் என்பவர் அத்திமீறி மீன் பிடித்ததோடு பாண்டிதுரையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் யோகேஷ் அவரது நண்பர்கள் சேர்ந்து பாண்டிதுரையை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இது குறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பாண்டிதுரை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் யோகேஷை நேற்று கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story