சேலம் கன்னங்குறிச்சியில் 2 வீடுகளில் திருடிய நபர் கைது !

சேலம் கன்னங்குறிச்சியில் 2 வீடுகளில் திருடிய நபர் கைது !
கைது
சேலம் கன்னங்குறிச்சியில் 2 வீடுகளில் திருடிய நபரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் கன்னங்குறிச்சி புதுஏரி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கதவை உடைத்து கடந்த மாதம் 26 பவுன் திருட்டு போனது.

அன்றைய தினமே அதே பகுதியை சேர்ந்த வங்கி மேலாளர் கமல் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் திருட்டு போனது. இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் இரு வீட்டிலும் திருடியது ஒருவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த திருட்டில் ஈடுபட்டது, பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (வயது35) என தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story