மாரியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

மாரியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு
உண்டியல் உடைப்பு
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நள்ளிரவு அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தம்மம்பட்டி அருகே உள்ள கோம்பை கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் கிரில் கேட்டில் உள்ள பூட்டுகளை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை மாசியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டரை பவுன் தாலி யையும் திருடிச்சென்றனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், கோயில் கிரில் கேட்டில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிரச் சியடைந்தனர்.

இதுகுறித்து ஊர் கவுண்டர் பெருமான அளித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story