மாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாக நேர்காணல்

மாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாக நேர்காணல்
மாருதி பாலிடெக்னிக் கல்லூரி
ஸ்ரீமாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாகநேர்காணல் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் வட்டாரம் மணிவிழுந்தான் மாருதி மற்றும் ஸ்ரீமாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாகநேர்காணல் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.சுந்தரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு முதன்மை பொது மேலாளர் என்.லஷ்மி நரசிம்மன், ஆர்.பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.சுந்தரம் பேசியபோது, இக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் திறமையுடன் பணியாற்றி வருகின்றனர். அதேபோல நீங்களும் சிறந்த முறையில் பணியாற்றி வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் இ.செல்வம், பொருளாளர் செ.ராஜவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story