கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

சங்கராபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் அனைவரும் பணிபுரியும் கிராமத்திலேயே கட்டாயம் தங்க வேண்டும்.கிராமங்களில் எதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியபடுத்த வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் நடக்க முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story