திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்

பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் செலவின பார்வையாளர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அனுராக் சவுத்ரி, செலவின பார்வையாளர் சௌரப் குமார் ராய் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 21- பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story