காவல் துறை தலைமையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு

காவல் துறை தலைமையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு
அணிவகுப்பு
பாராளுமன்றத் தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய காவல்துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி ஹவுசிங் போர்டு பகுதியிலிருந்து திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போளூர் சங்கம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மில்லத் நகர் பகுதி வரையில் திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Tags

Next Story