கடனை திருப்பி கேட்டவருக்கு கத்தி குத்து - பால்காரர் கைது

கடனை திருப்பி கேட்டவருக்கு கத்தி குத்து - பால்காரர் கைது

பைல் படம் 

சேலம் செட்டிச்சாவடியில் கடனை திருப்பி கேட்டு மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியவரை கத்தியால் குத்திய பால்காரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகே செட்டிச்சாவடியை அடுத்த விநாயகம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52), பால் வியாபாரி. இவருடைய மனைவி வசந்தா. இவர்கள் ராயர் என்பவரிடம் கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனர். இதனால் ராயர் கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு வசந்தாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கத்தியால் ராயரை குத்தியுள்ளார். காயம் அடைந்த ராயரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story