பள்ளி வாகனம் மோதி பால்காரர் பலி

பள்ளி வாகனம் மோதி பால்காரர் பலி

பைல் படம் 

எருமப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பால்காரர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி கல்லா குத்து பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவரும் மகன் சுப்பிரமணி 60 .இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் எருமப்பட்டி சிங்களம் கோம்பையில் உள்ள உதயகுமார் என்பவரின் தோட்டத்தில் பால் கறந்து விட்டு தனது மோட்டார் வாகனத்தில் எருமப்பட்டி கைகாட்டி நோக்கி வரும்பொழுது எதிரே விவேகானந்தா பள்ளி வாகனம் அதி வேகமாக வந்து இரண்டு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வண்டியின் டிரைவரையும் தேடி வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story