8 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர், ஆட்சியர்

8 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர், ஆட்சியர்

நடை பயிற்சி 

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை திட்டத்தின் கீழ் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் அதிகாரிகள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி ,மாவட்ட வருவாய் அலுவலர் . மு.மணிமேகலை , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் .உமாமகேஸ்வரி சங்கர் , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா , சுகாதாரத் துறை துணை இயக்குனர் பிரபு அஜித் குமார் , வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நடைபயிற்சி மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய நடைபயிற்சி மன்னம்பந்தலில் நாளை தமிழக முதல்வரால் திறப்பு விழா காண இருக்கும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வரை சென்று மீண்டும் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு நடை பயிற்சி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story