ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை   அமைச்சர் வழங்கினார்

நலதிட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மஹாலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் பயனாளிகளுடன் அமர்ந்து கண்டுகளித்தார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட பல்வேறு துறைசார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சார் ஆட்சியர் கோகுல் நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாத்துரை, வேப்பந்தட்டை இராமலிங்கம், வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, பேரூராட்சித் தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ் , பூலாம்பாடி பாக்கியலட்சுமி , லெப்பைக்குடிக்காடு ஜாஹிர் உசேன் , அரும்பாவூர் வள்ளியம்மை , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், டாக்டர் கருணாநிதி, நகர்மன்றத் துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story