சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

அறிமுக கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிபிஎம் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோருடன் வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.பின்னர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குறித்து, கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தலைவர் மாரிக்கண்ணு பங்கேற்று மேடையில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முத்துவிஜயன், நகர் மன்ற உறுப்பினர்கள் பத்மினி முருகானந்தம், மகாலட்சுமி, மாசிலாமணி உள்ளிட்டோர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், மாரிக்கண்ணுவை பேச அனுமதிக்கக்கூடாது என்று முழக்கமிட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story