அரசு பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம் எல் ஏ.

க.பரமத்தியில் அரசு பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம் எல் ஏ.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கையற்கன்னி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார். மேலும், க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், க.பரமத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு 77- மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

Tags

Next Story