தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது மத்திய இணை - அமைச்சர் எல்.முருகன் பேச்சு

தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது மத்திய இணை - அமைச்சர் எல்.முருகன் பேச்சு

 எல்.முருகன் 

தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு.
ஈரோடு மாவட்டம், சத்தி தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுக் கட்சி சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளருமான முருகன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் . பா.ஜ.க வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க, ஐ.ஜே.கே, அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகளுடன் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து முருகன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது, 39 இடங்களில் வெற்றி பெறுவோம் . மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது. பவானிசாகர் தொகுதியில் நிலவும் வனவிலங்கு பிரச்சனை தீர்க்கப்படும், அதோடு மக்களின் இறை நம்பிக்கைகளை, பெண்களை, பட்டியலின அருந்ததியர் மக்களை தரைக்குறைவாக பேசுவதுதான் இவரது வேலையாக இருக்கிறது என்றார். கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழ உறுப்பினரும், நீலகிரி பாராளுமன்ற குழு பொறுப்பாளர் வக்கில் அஜித்குமார், மாவட்ட தலைவர் கலைவாணி விஜயக்குமார், சத்தி நகர பாஜக செயலாளர் செல்வக்குமார், மாவட்ட மற்றும் கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story