சிவகாசி அருகே தாய், மகள் தற்கொலை

சிவகாசி அருகே தாய், மகள் தற்கொலை
சிவகாசி அருகே சோகத்தில் மூழ்கிய கிராமம்.தற்கொலை செய்து கொண்ட தாய்,மகள் உடல் நல்லடக்கம் செய்த கிராம மக்கள்...
சிவகாசி அருகே தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு பாப்புகுட்டி என்ற மனைவியும், ஐஸ்வர்யா, இந்துமதி,அருண்குமரன், என மூன்று குழந்தைகள்.கட்டிட தொழிலாளியாக பாலமுருகன் அவரது மனைவி பாப்புகுட்டி அதே பகுதியில் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா +2 ம்வகுப்பும் இந்துமதி 8ம் வகுப்பும்,மகன் அருண்குமார் 4ம் வகுப்பு படித்து வருகின்றார் இரண்டாவது மகள் இந்துமதி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதனை தாய், தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது

.சம்பவத்தன்று இந்துமதி தனது தாயின் சேலையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலைக்கு சென்று விட்டு திரும்பிய தாய்,மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் தனது கணவருக்கு தகவல் சொல்லிவிட்டு மகள் இல்லாத இந்த உலகில் நானும் இருக்க மாட்டேன் என்று கணவனிடம் கூறி செல்போனை துண்டித்து உள்ளார்.

பதற்றம் அடைந்த கணவர் பாலமுருகன் அவசர அவசரமாக வீடு திரும்பிய போது அங்கு மனைவியும் மகளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அக்கம் பக்கத்தில் உதவியுடன் இறந்த இரண்டு உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினரிடம் வழங்கப்பட்டன.

Tags

Next Story