மகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட தாய் பலி

மகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட தாய் பலி

தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் பலியான நிலையில் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அருகே கருப்பூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது41) விவசாயி. இவருடைய மனைவி நித்திய செல்வி (39). இவர்களுடைய மகள் சிவப்பிரியா(17). அன்பழகனுக்கும் அவரது மனைவி நித்திய செல்விக்கும் தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த நித்திய செல்வி சம்பவத்தன்று தனது மகள் சிவப்பிரியாவுடன் விஷம் தின்றார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நித்திய செல்வி இறந்தார். சிவப்பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story