தார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலை சீரமைக்க கோரிக்கை

தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்கு செல்லும் 3.8 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. சித்தாற்காடு, பாளையூர், தண்ணீர்பந்தல், அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடப்பாக்கத்திற்கு சென்றுவர, இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை சிதிலமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

மேலும், இருசக்கர வாகனத்தின் டயர்கள் பஞ்சர் ஆவதால், அப்பகுதி மக்கள் 10 கி.மீ., சுற்றிக்கொண்டு, செய்யூர் மற்றும் வெடால் வழியாக கடப்பாக்கத்திற்கு சென்று வருகின்றனர்.அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story